செந்தில் பாலாஜி மட்டுமல்ல இன்னும் 4 பேர் அதிமுகவில் சேர தூதுவிட்டனர்- ஓபிஎஸ்
ஆண்டிப்பட்டி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் 4 பேர் மீண்டும் அதிமுகவில் சேர வேண்டும் என கோரி என்னிடம் தூதுவிட்டனர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வனின் தொகுதியில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, ரூ, 1088 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வாக்கு பெறுவோம்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் 4 பேர் மீண்டும் அதிமுகவில் கேர என்னிடம் தூதுவிட்டனர். செந்தில் பாலாஜியும் திமுகவில் இணைவதற்கு முன்னர் தூதுவிட்டார். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார்.