தேனியில் பகீர்.. ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவர்.. இளைஞர் செய்த கொடூரமான காரியம் !
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவரை கழுத்தை நெரித்து கொலை செய்த அருண்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு 75 வயதான பொன்ராம் என்ற முதியவர் வீட்டில் இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மகள் மாரியம்மாள் அவரின் சாவில் மர்மம் உள்ளதாக தேவதானபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார், இதையடுத்து முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறை விசாரணை
பிரேத பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் முதியவரின் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவரின் வீட்டிற்கு நாள்தோறும் அருண்குமார் என்ற இளைஞர் வந்து செல்வார் என தெரிய வரவே அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கத்திய முதியவர்
அருண்குமாரும் அவர் நண்பரும் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளனர். அவரது நண்பர் திருமணமாகி சென்ற நிலையில் இவர் மது போதையில் முதியவரின் வீட்டிற்கு சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்த முயன்றபோது முதியவர் கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக அருண்குமார் தெரிவித்தார்.

கொலை வழக்கு பதிவு
இதை தொடர்ந்து அருண்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

பெரியகுளம்
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட அருண்குமாரை நீதிபதி முன் நிறுத்தபட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.. ஓரின சேர்க்கைகாக முதியவரை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.