ஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும்.. ஷாக் ஆன பெற்றோர்கள்!
வகுப்பறையிலேயே காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர் ஆசிரியர்கள்
Recommended Video
தேனி: ஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும் தகாத செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி அருகே உத்தமபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வெறும் 4 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். ஒரே ஒரு ஆசிரியர் இருக்கிறார். இவருக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியில் இன்னொரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஒரு டீச்சருக்கும், இங்கு வேலை பார்க்கும் வாத்தியாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த டீச்சருக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள் உள்ளன.
மதியானம் உணவு இடைவேளையில், பிள்ளைகள் வெளியே சாப்பிட சென்றுவிட்டால், டீச்சர் இருக்கும் கிளாஸ் ரூமுக்குள் ஆசிரியர் சென்று ஜாலியாக இருப்பாராம். இதை தனது செல்போனிலும் செல்பி எடுத்து கொள்வாராம். அது மட்டுமில்லை, டீச்சருடன் கிளாஸ் ரூமில் எடுத்த வீடியோவை தனது நண்பர்களுக்கு போட்டு காட்டியதுடன், அவர்களுக்கு ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்துள்ளார்.
அதிகாரிகள் மரியாதை தருவதில்லை... கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை
இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பள்ளி தாளாளர், மாணவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியரை தாளாளர் உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.
எனினும், இப்படி பிள்ளைகள் படிக்கும் வகுப்பறை என்றுகூட பார்க்காமல், தகாத செயலில் ஈடுபட்ட அந்த ஆசிரியர் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.