அட அது இல்லப்பா.. இதுக்கு போடுங்க.. அட ஆமாப்பா.. ஆமா.. தர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்
தேனி அமமுகவில் தங்க தமிழ்செல்வனுக்கு சின்னம் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது.
Recommended Video
தேனி: சிக்கன் பிரியாணி முக்கியமா இல்லை சின்னம் முக்கியமா.. தங்க தமிழ்ச்செல்வனிடம் போய் இதைக் கேட்டால் சின்னம்தாய்யா முக்கியம் என்று அடித்துச் சொல்வார்.. அந்த அளவுக்கு மனுஷன் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்.
அட, பின்ன என்னங்க.. இத்தனை காலமாக இரட்டை இலை என்று ஜாலியாக இருந்து விட்டு இப்போது பரிசுப் பெட்டியுடன் தொகுதிக்குள் பிரச்சாரத்திற்குப் போனால், என்னப்பு, தேர்தலா, போட்ருவோம்ப்பு,, இலைதானே போட்ருவோம் என்று ஊரில் உள்ள பெருசுகள் ஹாயாக கூறிச் செல்கிறார்களாம்.. மனுஷன் டென்ஷன் ஆவாரா மாட்டாரா.
அமமுக சார்பாக தேனி மக்களவை தொகுதியில் தங்க தமிழ்செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார். எப்படியும் ஓபிஎஸ் மகனை தோற்கடித்தே தீருவேன் என்று தொகுதிக்குள் றெக்கை கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருக்கு இப்போது சின்னம்தான் பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக பயந்து ஓடாது.. ஸ்டாலின் பொளேர்!
குக்கர் சின்னம்
சாதீய ஓட்டுக்களை பாதி நம்பினாலும், மீதி ஓட்டுக்களுக்கு சில தாராளங்களையும் தொகுதியில் காட்டி வருகிறார் தங்க தமிழ்செல்வன். இந்த நிலையில் அதிகம் எதிர்பார்த்து, போராடி கேட்கப்பட்ட குக்கர் சின்னம் கிடைக்காமல் போய்விட்டது. பரிசுப் பெட்டிதான் கிடைத்துள்ளது.
பரிசு பெட்டி
இங்குதான் சிக்கலே ஆரம்பித்துள்ளது. ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு இரட்டை இலையில் வளைத்து வளைத்துக் குத்திய மக்கள் இப்போது அவரை பரிசுப் பெட்டியுடன் பார்க்கும்போது பழைய சின்னம்தான் வந்து போகிறதாம். அதனால், "மறக்காம உங்களுக்கு இந்த முறையும் இரட்டை இலையில் ஓட்டு போட்டுடறோம்.. கவலையை விடுங்க" என்று கூறி விட்டு தமிழ்ச்செல்வன் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டுப் போகிறார்களாம்.
மாத்தி போட்ராதீங்கப்பா
இதைக் கேட்டதும் அதிர்ந்து போகும் தங்க தமிழ்செல்வனோ, "எய்யா.. ஏ ஆத்தா.. நான் இப்போதைக்கு சுயேச்சையிலதான் நிக்கறேன். மறக்காம என் சின்னத்துல ஓட்டு போடுங்க. அதுக்குப் போடாதீங்க" என்று சிரித்து சமாளித்து அவர்களிடம் மாத்திப் போட்ராதீங்கப்பா என்று புரிய வைக்க முயற்சிக்கிறாராம்.
நல்ல உதாரணம்
ஜனங்களுக்கு சின்னம்தான் முக்கியம். அப்படித்தான் நம்ம அரசியல்வாதிகள் ஜனங்களை வளர்த்து வைத்துள்ளனர். வேற எதையும் சிந்திக்க விடாமல், ஆள் பார்த்து வாக்களிக்க விடாமல் சின்னத்தை மட்டும் புத்தியில் புகுத்தி இதை மட்டும் பாருங்க போதும் என்று சொல்லி வைத்தால் கடைசியில் இப்படித்தான் நேரும் என்பதற்கு தங்க தமிழ்ச்செல்வன் படும் பாடுதான் நல்ல உதாரணம்.
ஆக, ரவீந்திரநாத் குமார் ஹேப்பி அண்ணாச்சி!