அமமுக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொண்டர்? தேனியில் பரபரப்பு
தேனி: தேனியில் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே நடந்த அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு கையில் துப்பாக்கியுடன் தொண்டர் ஒருவர் வந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி புதிய பேருந்து நிலையம் எதிரே, தனியார் மண்டபத்தில் அமமுக தேனி தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு காரில் நின்றபடியே தொண்டர் ஒருவர் கையில் துப்பாகிக்கியை, வைத்துக்கொண்டு நாலாபுறமும் சுடுவது போல வந்ததாக தகவல் பரவியது. இதனால், சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
போலீசார் அந்த தொண்டரை பிடித்து விசாரித்துள்ளார்கள. அப்போது போலீசார் விசாரணைக்கு பின் கூறுகையில், 'துப்பாக்கி கொண்டு வரவில்லை. சிகரெட் லைட்டரைத்தான் துப்பாக்கி என நினைத்து விட்டனர்' என்றனர். சில போலீசார், 'டம்மி துப்பாக்கி' என்றும் கூறினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தேனி பேருந்து நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.