தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு... மருத்துவமனையில் அனுமதி!

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்புகளே உள்ளன.
நாடு முழுவதும் கொரோனா ஒரு ஆண்டை கடந்து ஆட்டம் காட்டி வருகிறது. கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது.

Theni district Collector affected covid 19

மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்புகளே பதிவாகி வருகின்றன. கொரோனா உயிரிழப்பும் குறைந்து விட்டது. இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது பல்லவி பல்தேவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
Theni District Collector has been admitted to the hospital with a corona infection
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X