தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொத்து கேட்டு தகராறு.. காதல் மனைவியின் அத்தையை வெட்டிக்கொன்ற இளைஞர்

Google Oneindia Tamil News

தேனி: உத்தமபாளையம் அருகே சொத்தில் பங்கு கேட்டு காதல் மனைவியின் அத்தையை படுகொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனிமாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தம்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருடைய சகோதரர் நாகராஜ் என்பவருடைய மகன் வளர்மதியை அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

uthamapalayam woman killed by youth over asset issue

வாரத்துக்கு ஒருமுறை குளித்த கணவன்.... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனைவிவாரத்துக்கு ஒருமுறை குளித்த கணவன்.... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனைவி

அதன் பிறகு வளர்மதிக்கு சேரவேண்டிய சொத்துக்களை அவரது அத்தையான லட்சுமியிடம் கேட்டு வடிவேலு தொந்தரவு செய்து வந்தாராம்.

இந்நிலையில் நேற்று இரவு லட்சுமியின் வீட்டருகே சென்ற வடிவேல், சொத்தில் பங்கு தரும்படி மீண்டும் தகராறு செய்தாராம்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில், வடிவேல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லட்சுமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த உத்தமபாளையம் போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து வடிவேலை போலீசார் தேடிவருகின்றனர்.

English summary
uthamapalayam woman killed by youth over asset issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X