தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்? சிபிசிஐடி மீண்டும் விசாரணை

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வில் முறைகேடு.. உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஒப்புதல்-வீடியோ

    தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரை தேர்வு எழுதி வைத்து மோசடி செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர் இதில் ரூ.20லட்சத்தை புரோக்கரிடம் கொடுத்து மகனை மருத்துவராக்க மோசடியில் ஈடுபட்டதை வெங்கடேசன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்புமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு

     உதித் சூர்யா கடிதம்

    உதித் சூர்யா கடிதம்

    முன்னதாக இந்த விவகாரம் வெளியாகும் முன்பே தேனி மருத்துவக்கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என மாணவர் உதித் சூர்யா தனக்கு விருப்பம் இல்லை என கடந்த 12ம் தேதி எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

    ஆவணங்களை மறைக்க முயற்சி

    ஆவணங்களை மறைக்க முயற்சி

    ஆனால் அதே தேதியில் அவர் வகுப்பறையில் பங்கேற்றதாக வருகை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பின்னர் அது அடிக்கப்பட்டு அவர் பங்கேற்காதது போன்று திருத்தமும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதுபோல் சில ஆவணங்களை மறைக்க முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    ஆவணங்களை கைப்பற்றினர்

    ஆவணங்களை கைப்பற்றினர்

    இது தொடர்பாக தேனி அரசு மருத்துக் கல்லூரியில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி சிபிசிஐடி போலீஸ் எஸ்பி விஜயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

    மீண்டும் விசாரிக்க திட்டம்

    மீண்டும் விசாரிக்க திட்டம்

    அப்போது தான் வருகை பதிவேட்டை திருத்தியவிவகாரம் வெளியே தெரிந்தது. இந்நிலையில் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்? எதற்காக திருத்தப்பட்டது? என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    English summary
    who did changed student udit suriya's class attendance register? CBCID re-investigated to collage Professors
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X