பணம் இருப்பதால் முகேஷ் அம்பானி பிரதமராக முடியுமா?... தங்க தமிழ்ச்செல்வன் பாய்ச்சல்
தேனி: பணம் இருப்பதால் முகேஷ் அம்பானி பிரதமராக முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், மக்கள் நல்ல தலைமையை மட்டுமே தேர்வுசெய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தேனி தொகுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்
அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் களமிறங்குகிறார்.
இதற்கிடையே, தேனி தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை என்றும் பிரசார யுக்திகள் அதற்கு பதில் சொல்லும் எனவும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
தங்க தமிழ்செல்வன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் இவ்வாறு பதிலளித்தார்.