குழந்தை பிறந்த 11வது நாளில் ஊரணியில் மூழ்கி தந்தை மரணம்.. நெல்லை அருகே சோகம்!
நெல்லை: நெல்லை அருகே குழந்தை பிறந்த 11வது நாளில் தந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வாசுவேதநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த அங்கப்பன் என்பவரின் மகன் மாரிச்சாமி. 32 வயதான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
மாரிச்சாமி கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்த பின் வெயில் களைப்பில் மாரிச்சாமி ஊரில் உள்ள ஊரணி திண்டில் படுத்து தூங்கினார்.
கணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண்
ஊரணியில் மூழ்கி
தூக்க கலக்கத்தில் எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்து விட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அப்படியே ஊரணியில் மூழ்கி விட்டார்.
போலீசாருக்கு தகவல்
காயம் காரணமாக அவரால் எழுந்து வரமுடியவில்லை. அப்படியே மூர்ச்சையாகி ஊரணியில் இறந்துவிட்டார். இதை பார்த்தவர்கள் உடனே வாசுதேவநல்லூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடலை தேடும் பணி
தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மாரிச்சாமியின் உடலை தேடினர். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் நேற்று காலை மீண்டும் உடலை தேடும் பணி தொடங்கியது.
குழந்தை பிறந்து 11 நாட்கள்
நீண்ட தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாரிச்சாமியின் முதல் பெண் குழந்தை செல்வ அரசிக்கு 3 வயதாகும் நிலையில் இரண்டாவது பெண் குழந்தை வேல்மதி பிறந்து 11 நாட்களே ஆகிறது. குழந்தை பிறந்து 11 நாட்களே ஆன நிலையில் தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.