சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே கூறுபோட்டு தின்னும் மர்ம நபர்.. நெல்லையில் பரபரப்பு
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே வெட்டி கூறுபோட்டு தின்னும் மர்ம நபரை அப்பகுதியினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகிலுள்ளது டி.ராமநாதபுரம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கனகசபாபதியின் மகன் முருகேஷன் (43).
இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். முருகேஷனுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கம் உண்டாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மனைவி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களை யாரோ ஒரு மர்ம நபர் தின்று செல்வதாக தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது.
தகனம்
இந்த நிலையில் கிராமத்து மக்களிடையே பெரும் பீதியும்,பரபரப்பும் உருவானது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். அவரை உறவினர்கள் சுடுகாட்டில் தகனம் செய்து விட்டு திரும்பி உள்ளனர்.
மூதாட்டியின் உடல்
இதனை தொடர்ந்து இறந்து போனவர்களின் உடலை சாப்பிடும் மர்ம நபர் யார் என தெரிய வேண்டும் என நினைத்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சம்பவத்தன்று இரவு சுடுகாட்டுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் காத்திருந்த வேளையில் பிணம் எரிந்து கொண்டிருந்த போது அங்கு கையில் அரிவாளோடு வந்த முருகேசன் எரிந்து கொண்டிருந்த மூதாட்டியின் சடலத்தை கம்பால் விலக்கி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
விசாரணை
இதனைக்கண்ட மறைந்திருந்தவர்கள் குரல் எழுப்பி கற்களால் எரிந்துள்ளனர். பின்னர் அவர் ஓடியதாகவும் கூறுகின்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் இது குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீஸார் மனித மாமிசம் சாப்பிட்ட முருகேசனை பிடித்து விசாரணை செய்தனர்.
மனநல மருத்துவமனை
அவரிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியாத நிலையில் ஊர்மக்களின் நிதி உதவியோடு தனியார் வாடகை வாகனத்தில் வாசுதேவநல்லூரில் இருந்து சென்னை கீழ்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு போலீஸார் பாதுகாப்போடு அனுப்பி வைத்துள்ளனர்.