நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை!
நெல்லை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் உறுதி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது. இரு தொகுதிகளிலும் வரும் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
விக்கிரவாண்டியில் திமுகவின் நா. புகழேந்தியும் நாங்குநேரியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர், அதிமுகவில் விக்கிரவாண்டியின் முத்தமிழ்ச்செல்வனும் நாங்குநேரியில் நாராயணனும் களத்தில் உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. நாங்குநேரியில் பல கிராமங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை மக்களிடத்தில் விளக்கி வாக்கு கேட்டார். மேலும் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
நாங்குநேரி தொகுதி கிருஷ்ணாபுரம் பகுதியில் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/o2HhFjGl7Q
— M.K.Stalin (@mkstalin) October 9, 2019