திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூக்காண்டி தூங்குகிறார் என்றே அத்தனை பேரும் நினைத்தனர்.. அருகில் போய்ப் பார்த்தால்.. பரிதாபம்!

அரசு பஸ்ஸில் பயணம் செய்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார்

Google Oneindia Tamil News

நெல்லை: மூக்காண்டி தூங்கி கொண்டு இருக்கிறார் என்றுதான் முதலில் எல்லோருமே நினைத்தார்கள்.. ஆனால் கிட்ட போய் பார்த்த பிறகுதான் ஷாக் ஆனார்கள்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி. 61 வயதாகிறது. இவர் ஒரு ஓய்வு பெற்ற மில் தொழிலாளி.

இந்நிலையில், இவரது மகள் முக்கூடலில் வசிப்பதால், அவரை பார்த்துவிட்டு ஊர் திரும்ப முயன்றார். இதற்காக பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸில் ஏறி கொண்டார். ஆனால், பஸ் விக்கிரமசிங்கிபுரம் வந்ததும் அவர் இறங்க வேண்டிய பஸ் ஸடாப் வந்தும் இறங்கவில்லை. இதனால் பஸ் அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் நோக்கி சென்றது.

அரசு பேருந்து

அரசு பேருந்து

ஆனால், பஸ் விக்கிரமசிங்கிபுரம் வந்ததும் அவர் இறங்க வேண்டிய பஸ் ஸடாப் வந்தும் இறங்கவில்லை. இதனால் பஸ் அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் நோக்கி சென்றது. இதே பஸ்ஸில் இருந்த சிலர் பாபநாசம் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கினர்.

அசைவு இல்லை

அசைவு இல்லை

அப்போது மூக்காண்டி தூங்குவது போல இருந்ததை பார்த்து, கண்டக்டர் அருகில் சென்று எழுப்பினார். ஆனால் எந்தவித அசைவும் அவரிடமிருந்து இல்லை. இதனால் பாபநாசம் டிப்போ பக்கமாக ஓரங்கட்டப்பட்டது. உடனடியாக அரசு பஸ் அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.

 ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

அவரிடம் மூக்காண்டி பற்றி கேட்டதற்கு, "அவர் இறந்து விட்டாரா அல்லது இல்லையா என்பதை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார், மூக்காண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இறந்துபோன மூக்காண்டிக்கு சுப்புலெட்சுமி என்ற மனைவியும் மூன்று மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
இதில் மகன் மும்பையில் வசித்து வருகிறார். பஸ்ஸில் பயணம் செய்த ஒருவர் பயணித்தபடியே இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
An Old man died by heart attack in Nellai gov bus and Police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X