பரபர வீடியோ.. மஞ்ச பையில் ஆப்பிள் பழங்களுடன்.. உமா மகேஸ்வரி வீட்டுக்கு சாவகாசமாக சென்ற கார்த்திகேயன்
உமா மகேஸ்வரி வீட்டுக்கு கொலையாளி ஆப்பிள் பழங்களை வாங்கி செல்கிறார்.
Recommended Video
நெல்லை: உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், ஆப்பிள் பழங்களை வாங்கி கொண்டு, உமா மகேஸ்வரி வீட்டிற்கே செல்கிறார். இப்படி பழங்கள் வாங்கி கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
போன வாரம் நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு வேலைக்கார பெண் மாரி ஆகிய 3 பேரையும் கொலை செய்த குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
3 பேரையும் கொன்ற முக்கிய குற்றவாளியான சீனியம்மாள் மகன் கார்த்திகேயனிடம் இது சம்பந்தமாக வாக்குமூலமும் பெறப்பட்டது.
அப்போது, வீடியோவில் கையில் மஞ்சள் பையுடன் போவது யார் என்று போலீசார் கேட்க.. "எங்கே, அதை காட்டுங்க.." என்று வீடியோவை பார்த்த கார்த்திகேயன், "சூப்பர். அது நான்தான்.." என்று சொல்லி உள்ளார்.
சீனியம்மாள் சொன்ன 2 பேர் யார்.. நெல்லை திமுகவில் பெரும் கலக்கம்.. சூடுபிடிக்கும் உமா மகேஸ்வரி வழக்கு
"கையில் என்ன மஞ்சள் பை, என்ன இருக்கு அதிலே" என்று போலீசார் கேட்டதற்கு, "அது ஆப்பிள் பழம்" என்று பதிலளித்துள்ளார். "எத்தனை பேர் சேர்ந்து இந்த கொலையை செய்தீர்கள்" என்று கேட்டதற்கு, "நான் ஒத்த ஆள்தான்.. வேற யாரு.. வேற யாராவது இருக்காங்களான்னு நீங்களே கண்டுபிடிங்களேன்" என்று திருப்பி போட்டு பேசியிருக்கிறார்.
இப்படி செய்திகள் வெளிவந்த நிலையில் தான் அது சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், உமா மகேஸ்வரி வீட்டிற்கு கொலை செய்ய கார்த்திகேயன் செல்லும்போது கடையில் பழங்கள் வாங்கி கொண்டு நடந்து செல்கிறார். அந்த பழங்களை ஒரு மஞ்சள் பையில் போட்டுக் கொண்டு சாவகாசமாக தெருவில் நடக்கிறார்.
கொலை செய்ய வெறியுடன் ஒருவர் செல்லும்போது ஆயுதங்களை தானே கொண்டு செல்வார்கள்? ஆனால் கார்த்திகேயன் ஏன் ஆப்பிள் பழங்களை வாங்கி கொண்டு போனார் என்பது மட்டும் யாருக்குமே புரியவே இல்லை!