பூங்கோதை ஆலடி அருணா மருத்துவனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது.. திமுகவில் பரபரப்பு!
பூங்கோதை ஆலடி அருணா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
நெல்லை: திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உட்கட்சி பூசல் காரணமாக கடுமையான மனஅழுத்தத்தில் அவர் இருந்ததாகவும், இந்த நிலையில் அவர் உடல் நல பாதிப்பு என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்... இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆலங்குளம் தொகுதியில் இருந்து திரும்பவும் எம்எல்ஏவானார்.. கருணாநிதி மீது அளவுகடந்த பற்றை கொண்டிருந்தவர்.. தற்போதும் திமுகவில் தீவிரமாக சுழன்று வேலை பார்த்து வருபவர்.
இந்நிலையில், பூங்கோதைக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. மருத்துவமனையில் பூங்கோதை சிகிச்சை பெற்று வருவதாகவும், பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சையில் உள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அண்மையில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் விவகாரத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார் பூங்கோதை.. குறிப்பாக, நேற்று கடையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூங்கோதை அவமரியாதை செய்யப்பட்டதாக தெரிகிறது.. சிவ பத்மநாபன், துரை என்ற இரண்டு மாவட்டச் செயலாளர்களும் பூங்கோதைக்கு ரொம்ப ஜூனியர்கள்.. இவர்களுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டதில் இருந்தே உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ளது.
நைட் ஷிப்ட் பார்ப்பவர்களை ஆஸ்துமா அட்டாக் பண்ணும் வாய்ப்பு அதிகமாம் - ஆய்வு சொல்லுது
இந்த மன அழுத்தம் காரணமாகவே பூங்கோதைக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இப்படி திடீரென கட்சியினரால் மன அழுத்தத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.