அப்பாவுடன் விதை வாங்க போனவருக்கு சோகம்.. எமனாக வந்த கார்.. சங்கரன்கோவிலில் பரிதாபம்
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விவசாயத்திற்காக விதை வாங்க தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கருத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன் வயது 65, இவர் கூட்டுறவு ரேசன் கடையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் தனது மகன் இளையராஜா வயது 35. இருவரும் விவசாயத்திற்காக விதை வாங்க சங்கரன்கோவிலுக்கு சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
மலையான் குளம் அருகே
இருசக்கர வாகனத்தை காசி ராஜனின் மகன் இளையராஜா ஓட்டினார். காசிராஜன் பின்னால் அமர்ந்து இருந்தார். இருசக்கர வாகனம் கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் மலையான்குளம் அருகே வந்த கொண்டிருந்தது.
பயங்கர மோதல்
அப்போது மதுரையில் இருந்து மணிகண்டன் வயது 35 என்பவர் ஓட்டி வந்த கார், இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் தந்தை மகன் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
மருத்துவர்கள் தகவல்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குருவிகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய தந்தை, மகனை சங்கரன்கோவில் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் உயிரிழந்ததை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தந்தை, மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கிராமத்தில் சோகம்
இந்த விபத்து குறித்து குருவிகுளம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் உரிமையாளர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மகன் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் கருத்தானூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது