முன்னாள் மேயர் கொலை பிரச்சினை பெரிசா வெடிக்கும் போலயே.. எச். ராஜாவுக்கு கவலை!
Recommended Video
சென்னை: முன்னாள் மேயர் கொலை பிரச்சனை ரொம்ப பெரிசா வெடிக்கும்போல இருக்கே என்று எச்.ராஜா தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்.
நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து, அவருடைய கணவர், வீட்டு வேலைக்கார பெண் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.
இந்த கொலை நடந்து 4 நாள் ஆகியும் ஒரு வார்த்தைகூட எச்.ராஜா அனுதாபமோ, இரங்கலோ சொல்லவில்லை. ஆனால் இந்த கொலையில் திமுக பெண் அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று போலீசார் சந்தேகித்ததும் இன்று தனது கருத்தை சொல்லி உள்ளார்.
யார் யாரெல்லாம் திமுகவுக்கு எதிரான செய்திகளை பதிவிட்டுள்ளார்களோ அதையெல்லாம் ரீட்வீட் செய்து தனது ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
"அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதயகுமார் கொலை தொடங்கி சாதிக் பாட்ஷா கொலை வரை தமிழக மக்கள் கண்முன் வந்து போகும்" என்கிறது ஒரு ட்வீட்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதயகுமார் கொலை தொடங்கி சாதிக் பாட்ஷா கொலை வரை தமிழக மக்கள் கண்முன் வந்து போகும் https://t.co/WoxUGXm9Ah
— H Raja (@HRajaBJP) July 26, 2019
"திருநெல்வேலி முன்னாள் மேயர் கொலை பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போல் தோன்றுகிறது" என்று மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
திருநெல்வேலி முன்னாள் மேயர் கொலை பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போல் தோன்றுகிறது https://t.co/pn66QVU1Gi
— H Raja (@HRajaBJP) July 26, 2019