நான் காந்தியின் ரசிகன்.. இறுதி மூச்சுவரை அவரை பின்பற்றுவேன்.. நெல்லையில் கமல் மாஸ் பேச்சு!
திருநெல்வேலியில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
திருநெல்வேலி: காந்திதான் எனது வழிகாட்டி, காந்தியை பின்பற்றித்தான் எப்போது செயல்படுவேன், என்று திருநெல்வேலியில் நடக்கும் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
திருநெல்வேலியில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. மிக மிக பிரம்மாண்டமாக இந்த விழா நடக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் இதில் கலந்து கொண்டு உள்ளனர். மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று இருக்கிறது. இதை அடுத்த இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.
அல்வா
கமல்ஹாசன் தனது பேச்சில், பல சாதனைகளுக்கு பெயர் போனது திருநெல்வேலி.திருநெல்வேலி அல்வா புகழ் பெற்றது: இத்தனை காலம் அரசியல் வாதிகள் நமக்கு அல்வா கொடுத்தார்கள். இனி இந்த மக்கள் அல்வா கொடுக்கும் அரசியல் வாதிகளுக்கு அல்வா கொடுப்பார்கள்.
கூட்டம்
மக்கள் நீதி மய்யம் வெறும் பேசும் கூட்டம் அல்ல: செயல்வீரர்களின் கூட்டம். மக்கள் நீதி மய்யத்தை கிண்டல் அடித்தவர்கள் இப்போது மய்யம் என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். நான் சாதனை செய்ய அரசியலுக்கு வந்து இருக்கிறேன்.
சொல் அல்ல
சாதனை என்பது சொல் அல்ல, செயல். எங்களை போன்ற கூட்டத்தை நீங்கள் பார்த்தது கிடையாது. நான் காந்தியின் ரசிகன், யாரும் எனக்கு காந்தியை பற்றி சொல்லிக்கொடுத்தது இல்லை. காந்தியை தேடி தேடிப் படித்தேன். ஆனால் எங்கள் கட்சிக்கும் காந்திக்கும் சம்பந்தமில்லை.
என்னுடைய வழிகாட்டி
என்னுடைய வழிகாட்டிதான் காந்தி. நான் பல விஷயங்களை லேட்டாக கற்றுக்கொண்டேன். தாமதமாக மலர்ந்தேன்: ஆனாலும் உணர்ந்தேன். காந்தியை பற்றி பேசுவதால் நான் வேறு கட்சியில் சேர்வதாக நினைக்க வேண்டாம். காந்தியை பார்த்து பின்பற்றி நடப்பது எல்லாம் மிகப்பெரிய கஷ்டம்
அகிம்சைதான்
அகிம்சை என்பது பெரிய வீரம்: அந்த வீரம் கஷ்டம். காந்தியை பார்த்து அது போல ஆக முயற்சி செய்யுங்கள். தன்மானம்தான் நம்முடைய ரத்தம். கட்சி தொடங்கிவிட்டேன், இனி மக்கள்தான். மக்கள் எல்லோரும் மய்யத்திற்கு வர வேண்டும்.
மய்யத்திற்கு வாருங்கள்
மய்யத்திற்கு வாருங்கள் மக்களே. மநீம செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கிறது. நாங்கள் பகல் கனவு காண்பதாக சிலர் நினைக்கிறார்கள். எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது. எங்கள் பணிகள் இங்கு நெல்லையில் இருந்து தொடங்கும், என்றார்.