திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சங்கரன்கோவிலில் குடும்பத் தகராறு - போதை வெறியில் மனைவி, மகளை வெட்டி சாய்த்த குடிகாரன் போலீசில் சரண்

கணவன் மனைவி குடும்பத்தகராறுகள் எல்லாமே இப்போது கொலையில்தான் முடிகிறது. சங்கரன் கோவில் அருகே குடிப்பதை கண்டித்த மனைவி மகளை அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் ஒருவர்.

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவி, மகளை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார் ஒருவர் நேராக காவல் நிலையத்தில் போய் சரணடைந்துள்ளார். குடும்பத்தகராறுகள் எல்லாமே இப்போது கொலையில் முடிந்துள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும் சேவலில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கணவனால் வெட்டிக்கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் வெள்ளத்துரச்சி என்பதாகும். அவரது மகள் சிவரஞ்சனி. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும் சேவலில் கணவன் சவுந்தரபாண்டியனுடன் வசித்து வந்தார் வெள்ளத்துரச்சி. சவுந்தரபாண்டியன் தினசரியும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வாராம்.

Man kills wife surrenders before cops in Puliyankudi Police station

இன்றும் வழக்கம் போல காலையிலேயே குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வெள்ளத்துரச்சியும் மகள் சிவரஞ்சனியும் குடிப்பதை கண்டிக்கவே, போதை வெறியில் இருந்த சவுந்தரபாண்டியன் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி, மகளை வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

குழந்தைக்கு ஆசைப்பட்ட கலைமதி முட்டுக்கட்டை போட்ட சதீஷ் - அடித்துக்கொன்ற மாமனார் கைது குழந்தைக்கு ஆசைப்பட்ட கலைமதி முட்டுக்கட்டை போட்ட சதீஷ் - அடித்துக்கொன்ற மாமனார் கைது

இதில் வெள்ளத்துரச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிய சிவரஞ்சனியை அக்கம் பக்கத்தினர் சங்கரன்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான சவுந்தரபாண்டியனை தேடி வந்தனர். இந்த நிலையில் கையில் அரிவாளுடன் புளியங்குடி காவல்நிலையத்தில் சவுந்தரபாண்டியன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி படங்கள் உதவி : தென்காசி மாரிமுத்து

English summary
A 40 years old man name Soundrapandiyan allegedly killed his wife stabbed his daughter surrender before police in Puliyankudi Police station near Sankarankoil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X