அனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா? ஸ்டாலின் சவால்
Array
நாங்குநேரி; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேதல் வரும் 21-ந் தேத்இ நடைபெறுகிறது.. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ரெட்டியார்பட்டியில் ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்த போது பேசியதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தாம் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர் விபத்தில் முதல்வரானவர். இதை சுட்டிக்காட்டினால் தனிப்பட்ட முறையில் ஆவேசமாக பேசுகிறார் அவர்.
இப்போது இன்னொரு சவால் விடுகிறேன்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது எம.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? அப்போதுதான் மக்களின் முதல்வர் யார் என்பது தெரியும்.
சுவிஸ் வங்கியில் எனக்கு கணக்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். அப்படி இல்லை எனில் எடப்பாடி பழனிசாமி ஊரைவிட்டே ஓட தயாரா? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.