மன நிலை சரியில்லாத மாரியம்மாள்.. 2 குழந்தைகள் கொலை.. தானும் தூக்கில் தொங்கிய பரிதாபம்
2 குழந்தைகளை கொன்ற தாய் தற்கொலை செய்து கொண்டார்
நெல்லை: 2 குழந்தைகளையும் கொலை செய்து மாரியம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் வசித்து வருபவர் மைக்கேல். இவருடைய மனைவிதான் மாரியம்மாள். சக்தி அனுசுயா என்ற 5வயது மகளும், துரைசிங் என்ற 4 வயது மகனும் இந்த தம்பதிக்கு உள்ளனர்.
மாரியம்மாள் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. அதனால் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில நாட்கள் அவர் மாத்திரை சாப்பிடவில்லை என்றால் மனநிலை பாதிப்பு அதிகமாகி கணவருடன் அதிகமாக சண்டை போடுவாராம்.
இறுக்கி கட்டி பிடித்து லிப் கிஸ்.. அடுத்த சில நொடிகளில் நேர்ந்த விபரீதம்.. துயரத்தில் முடிந்த இன்பம்
இந்த நிலையில் நேற்றிரவு மாரியம்மாள் திடீரென்று தன்னுடைய 2 குழந்தைகளையும் தலைகாணியை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சக்தி அனுசுயா நிகழ்விடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டாள். மகன் துரைசிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும், பலனின்றி இறந்துவிட்டான்.
இதனிடையே இரு குழந்தைகளும் இறந்து விட்டனர் என்று நினைத்த மாரியம்மாள், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போதுதான், மாரியம்மாளுக்கு ஒரு வயதில் அனாலிகா பிரகாஷினி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது என்றும், அந்த குழந்தையை 6 மாசத்துக்கு முன்பு எறும்பு பவுடர் கலந்த உணவை ஊட்டியும், துணியால் முகத்தை அழுத்தி கொன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. மைக்கேலும், சொந்தக்காரர்களுக்கு, குழந்தை இயற்கையாக இறந்துவிட்டது என்று நினைத்து அடக்கமும் செய்துள்ளனர்.
மாரியம்மாளுக்கு மனநலன் பாதித்ததால் இப்படி கொலைகளை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆனால் 3 பேரின் உடல்களை கண்டு மைக்கேல் கதறியது அங்கிருந்த அனைவரையும் கலங்க செய்துவிட்டது.