தென்காசி... எங்கப்பா வேட்பாளர்களைக் காணோம்.. நாம் தமிழர் மட்டுமே மனு தாக்கல்!
Recommended Video
தென்காசி: தென்காசி தனி தொகுதியில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் மனு தாக்கல் செய்தார். முக்கிய கட்சிகளைக் காணவில்லை.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இதேபோன்று திமுக ,காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் போட்டியிடுகின்றார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொன்னுத்தாய் என்பவர் போட்டியிடுகிறார். மூன்று பேரும் இன்று வரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் சிவகிரியை சேர்ந்த மதிவாணன் என்பவர் இன்று மதியம் 2.30மணிக்கு தென்காசி கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான சவுந்தரராஜனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தென்காசியில் இதுவரை ஒரே ஒரு வேட்பாளர்மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் அதுவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.