திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தங்கச்சியை தூக்கிட்டு போய் கட்டுவேன்.. தூக்குனா தலையை வெட்டுவோம்.. சவால் விட்டு ஒரு கொலை!

புதுமாப்பிள்ளையை வெட்டி கொன்ற கும்பல் வாக்குமூலம் தந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    மாப்பிள்ளையின் தலையை துண்டித்த பெண் வீட்டார்| New groom killed near nellai due to love marriage

    நெல்லை: "உன் தங்கச்சியை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்றேன்னு" சவால் விட்டான். உடனே நாங்க,"அப்படி கல்யாணம் பண்ணினா, உன் தலையை துண்டா வெட்டி எடுத்து விடுவோம்"ன்னு பதிலுக்கு சவால் விட்டோம்" என்று புதுமாப்பிள்ளையை கொன்றவர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமம் மறுகால்குறிச்சி. இங்கு வசித்து வரும் தம்பதி அருணாசலம் - சண்முகத்தாய். இவர்களுடைய 2-வது மகன் நம்பிராஜன். 23 வயதாகிறது.

    அங்குள்ள பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் அதே ஊரை சேர்ந்த வான்மதி என்ற பெண்ணை காதலித்தார்... வான்மதிக்கு 19 வயது... ஒரே சமூகம்தான்.. இருந்தாலும், பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

    நெல்லை

    நெல்லை

    இதனால், 2 மாசத்துக்கு முன்பு, காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர். அதே ஊரில் இருந்தால் வாழ விட மாட்டார்கள் என்று பயந்து, நெல்லை டவுன் வயல் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறினர். இவர்கள் வசித்து வந்த அதே பகுதியில் முத்துப்பாண்டியன் என்பவரும் வசித்து வருகிறார். இவர், இரு வீட்டு தரப்பையும் சமாதானம் செய்து வைப்பதாக வான்மதியிடம் சொல்லி உள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்த நிலையில் 2 நாளைக்கு முன்பு முத்துப்பாண்டியன் நம்பிராஜனுக்கு போனை போட்டு, ரெயில்வே கேட் பகுதிக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூப்பிட்டு, மிக கொடூரமாக கொன்றுவிட்டார். ரயில்வே கேட் பகுதியில், நம்பிராஜன் தலை துண்டாகி கிடந்ததை கண்டு போலீசாரே அதிர்ந்தனர். சடலத்தில் ஏராளமான வெட்டுக்காயங்கள் இருந்தன. ரயில்களுக்கு இடையே உடலும், தண்டவாளத்துக்கு நடுவில் தலையையும் போட்டுவிட்டு தப்பி உள்ளனர்.

    முத்துப்பாண்டியன்

    முத்துப்பாண்டியன்

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட, வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, உறவினர்கள் செல்லத்துரை, முருகன் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர்களை கைது செய்தனர். வான்மதியின் அண்ணன், போலீசில் சொன்ன வாக்குமூலம் இதுதான்:

    கல்யாணம்

    கல்யாணம்

    "நான் ஒரு குரூப்.. நம்பிராஜன் ஒரு குரூப்.. அவன் குடும்பத்து மேல நிறைய கேஸ் இருக்கு.. நம்பிராஜன் மேலயும் நிறைய வழக்கு இருக்கு. இந்த சமயத்துல என் தங்கச்சி பின்னாடி அடிக்கடி அவன் சுற்றி வருவதாக தெரிந்தது. அதனால நான் என் நண்பர்களை கூட்டி சென்று அவனை எச்சரித்தேன்.. அதேபோல அவங்க குடும்பத்தை பற்றி என் தங்கச்சியிடம் எடுத்து சொல்லியும் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டோம் என்று சொன்னோம்.

    தலையை எடுத்தோம்

    தலையை எடுத்தோம்

    இதை கேள்விப்பட்ட நம்பிராஜன், "உன் தங்கச்சியை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்றேன்னு" சவால் விட்டான். உடனே நாங்க,"அப்படி கல்யாணம் பண்ணினா, உன் தலையை எடுத்து விடுவோம்"ன்னு பதிலுக்கு சவால் விட்டோம். அவன் சொன்னபடியே தங்கச்சியை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணவும் எங்களுக்கு ஆத்திரம் வந்தது. அதனாலதான், கொலை செய்ய முடிவு செய்தோம்" என்றார்.

    English summary
    New groom murder due to prejuduice and nellai police arrested five person
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X