திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காதலியை பிடிக்கலை.. கழற்றிவிட பார்த்தும் விரட்டியதால் தற்கொலை.. போலீஸ்காரர் மரணத்தில் பரபரப்பு

துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Google Oneindia Tamil News

நெல்லை: காதலியை கல்யாணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை.. கழட்டிவிட்டாலும் திரும்ப திரும்ப காதலி விரட்டி கொண்டே இருந்ததால், போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நித்திரவிளையை அடுத்த பாறையடியை சேர்ந்தவர் அஜின்ராஜ். இவருக்கு வயது 26. நெல்லை மாவட்டம் மணி முத்தாறு 9-வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்த அஜினுக்கு கோதையாறு நீர் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணி போடப்பட்டிருந்தது.

நேற்று பணியில் இருந்தபோது, பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாகியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் அஜின். இதனால் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பதறி போய் ஓடி சென்று பார்த்தார்கள். அப்போ கழுத்தில் குண்டடி பட்டு, ரத்த வெள்ளத்தில் அஜின் மிதந்து கிடந்தார்.

30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு

வேலை கிடைத்தது

வேலை கிடைத்தது

இதையடுத்து விசாரணை ஆரம்பமானது. முதல்கட்ட தகவலில் அஜினுக்கு அவரது ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவிமீது காதல் இருந்ததும், இதனால்தான் தற்கொலை என்றும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸ் வேலை கிடைத்ததும் காதலியை கொஞ்சம் கொஞ்சமாக கழட்டி விட முயன்றுள்ளார் அஜின். இது தொடர்பாக காதலி நித்திரவிளை போலீசில் புகார் செய்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் போலீசாரும் அஜினை விசாரித்தனர்.

உத்தரவாதம்

உத்தரவாதம்

உடனே அஜினும், இன்னும் 6 மாசத்தில் காதலியை கல்யாணம் செய்து கொள்வதாக என்று உத்தரவாதம் அளித்துள்ளார். அதன்படி கெடுவும் முடிந்துள்ளது. திரும்பவும் காதலி அஜினை தொடர்பு கொண்டு கல்யாண பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.

களியக்காவிளை

களியக்காவிளை

அதற்கு அஜின், நாளை (அதாவது நேற்று) இருவரும் ஊரில் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லி உள்ளார். அதன்படி காதலியும் ஊரில் கல்யாணத்துக்காக காத்திருந்தார். ஆனால் அஜின் அங்கு போகவே இல்லை. இதனால் திரும்பவும் காதலி களியக்காவிளை போலீசில் போய், அஜின் ஊருக்கு வரவில்லை என்று சொன்னார். உடனடியாக அஜினை போலீசார் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கதறி அழுதார்

கதறி அழுதார்

இந்தநிலையில்தான், கோதையாறு நீர் மின் நிலையத்தில் அஜின் தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இதைக் கேட்டதும் காதலி கதறி கதறி அழுதார். அஜின் தற்கொலை சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது. காதலியை திருமணம் செய்து கொள்ள பிடிக்காமல் அஜின் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Nagarcoil Police man Ajin Raj Suicide near Nellai due to Love Torture
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X