திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடியல சார்.. ஹெலிகாப்டரே கைவிரித்த சோகம்! கண்முன் விழுந்த பாறைகள்.. நெல்லை குவாரியில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திருநெல்வேலி குவாரி விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நேற்று ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்ட போதும் கூட உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்க முடியவில்லை.

Recommended Video

    Nellai Quarry விபத்து..300 அடி ஆழத்தில் நடந்த சோகம் | Oneindia Tamil

    திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்திலுள்ள அந்த தனியார் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டது. பாறைகள் திடீரென உடைந்து குவாரி உள்ளே விழுந்ததில் கொடூரமான விபத்து ஏற்பட்டது.

    திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை! திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!

    300 அடி ஆழத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த 6 பேர் இந்த விபத்தில் சிக்கினார்கள். இதுவரை 2 பேர் இங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 3 பேரை மீட்கும் போராட்டம் நடந்து வருகிறது.

    குவாரி

    குவாரி

    இந்த நிலையில் குவாரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நேற்று ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்ட போதும் கூட உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்க முடியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி உள்ளே இறங்கி, ஊழியர்களை அதில் கட்டி தூக்கலாம் என்ற முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக ராமேஸ்வரம் ஐஎன்எஸ் பருந்துபடை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது.

    ஹெலிகாப்டர்

    ஹெலிகாப்டர்

    ஆனால் ஹெலிகாப்டர் மூலம் கீழே சிக்கி இருந்தவர்களை மீட்க முடியவில்லை. பாறைகள் பெரிதாக இருந்ததால் அதை ஹெலிகாப்டர் வைத்து அகற்ற முடியவில்லை. பாறைகளை அகற்றினால்தான் உள்ளே இருப்பவர்களை தூக்க முடியும். இதனால் ஹெலிகாப்டர் வந்தும் பயன் அளிக்கவில்லை. இதையடுத்து மீட்பு பணிகளை செய்ய முடியாததால் ஹெலிகாப்டர் திரும்பி சென்றது.

     நெல்லை குவாரி

    நெல்லை குவாரி


    இதையடுத்து நெல்லை குவாரி விபத்தில் 300 அடி பள்ளம் என்பதால் ஊழியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் நேற்று மீட்பு பணிகள் செய்யப்படவில்லை. அதோடு சரியாக நேற்று மீட்பு பணிகள் செய்யும் நேரத்தில் கண் முன்னே பாறைகள் விழுந்தன. இதனால் உள்ளே இருந்த அதிகாரிகள் அலறி அடித்து ஓடினர். இதனால் தற்காலிகமாக நேற்று மாலையில் இருந்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

    மேலாண்மை அதிகாரிகள்

    மேலாண்மை அதிகாரிகள்

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று குவாரிக்கு வருகிறார்கள். அவர்கள் மூலம் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் ஆழம் தோண்டப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 90 அடி வரை தோண்ட அனுமதி பெற்றுவிட்டு 300 அடிக்கும் கீழே தோண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    விபத்திற்கு காரணம்

    விபத்திற்கு காரணம்

    இதுவே விபத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது வரை நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது முன்னிர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையான அனுமதி இன்றி குவாரி பணிகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    English summary
    Quarry accident in Thirunelveli: Why Helicopter could not rescue the workers successfully? திருநெல்வேலி குவாரி விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நேற்று ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்ட போதும் கூட உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்க முடியவில்லை.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X