ராகுல் சொல்வது சரிதான்.. மோடி "திருடன்தான்".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு
நெல்லை: ராகுல் சொல்வது சரிதான். மோடி திருடன்தான் என அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பாக பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளித்து பிரசாரம் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி அவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஒரு விரல் புரட்சியே.. தமிழக மக்களுக்கு மாபெரும் ஆசிட் டெஸ்ட்.. நாளையுடன் ஓயுது பிரச்சாரம்!
வரவில்லை
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அதிமுக வேட்பாளர் எச் மனோஜ் பாண்டியனை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தார். ஆனால் வேட்பாளர் வராமல் இவர் மட்டும் பேசினார்.
நியாயம்
அப்போது அவர் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி டீ விற்று முன்னேறியவர். நான் பேப்பர் விற்று முன்னேறினேன். நான் நாட்டாமை. அதனால் நியாயத்தை மட்டுமே பேசுவேன்.
திருடன்
பிரதமர் மோடி தன்னை மக்களின் காவலாளி என்கிறார். ஆனால் ராகுல் காந்தியோ மோடி காவலாளி அல்ல, அவர் ஒரு திருடன் என்கிறார். ஆமாம் அவர் ஒரு திருடன்தான்.
உழைக்க காத்திருப்பு
மக்களின் மனங்களை கவர்ந்த திருடன். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என நினைத்து நினைத்து மக்களின் உள்ளங்களை களவாடியவர். உங்களுக்காக உழைக்க காத்திருப்பவர்தான் பாரத பிரதமர் மோடி என்றார் சரத்குமார்.