குவிந்த மக்கள்.. தாமிரபரணி நதிக்கரையில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தகனம்
நெல்லை: நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியிலுள்ள தாமிரபரணி நதிக்கரையில் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல், தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, நூற்றுக்கணக்கானோர் கூடி, அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
Recommended Video
தமிழகத்தின் கடைசி முடிசூடிய மன்னரான நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஜமீன்ந்தார் முருகதாஸ் தீர்த்தபதி (89) உடல்நலக் குறைவால், நேற்று காலமானார்.
இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரண்மனையில் தொடங்கிய சிங்கபட்டி ஊரின் முக்கியமான வீதிகளின் வழியாக பயணித்து, தாமிரபரணி நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜ முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெற்று, உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் திமுக சார்பில் முன்னாள் சட்ட சபை சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கொரோனா நோயாளிகளிடம் இருந்து எத்தனை நாட்களுக்கு பின் நோய் பரவாது.. சிங்கப்பூர் சூப்பர் கண்டுபிடிப்பு
திரளான பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். சிங்கம்பட்டி ஜமீனுக்கு உட்பட்ட அனைத்து கிராமத்தில் உள்ள மக்களும் திரளாக பங்கேற்றனர்.
இந்த இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் முக கவசம் அணிந்து இருந்தனர், ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாததை பார்க்க முடிந்தது.