தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகம் விழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்
Recommended Video
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் வருடாந்திர மாசி மகம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கடடுப்பாட்டில் இயங்கும் காசி விசுவநாதர் ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது.
வடக்கே உள்ள காசிக்கு நிகரானதாக கருதப்படும் தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு. அதே போல் இந்த ஆண்டிற்கான மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. கொடிமரத்தை பல்வேறு பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்தஆலய குருக்கள் அபிஷேக தீர்த்தபுனிதநீரை ஓடையில் முறையாக விடாமல் அதனை வாரியல் மூலம் செய்து ஓடையில் கலக்க செய்தது அங்கிருந்த பக்தர்களை முகம்சுளிக்க செய்தது.
#தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகம் விழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம் #tenkasi #kasiviswanathartemple pic.twitter.com/FZIvgvz8LS
— Oneindia Tamil (@thatsTamil) February 11, 2019
இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிறது. நாள் தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும், ரிஷபம், யானை , பூங்கோயில் போன்ற வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
மேலும் விழா காலங்களில் சமய சொற்பொழிவுகள், ஆன்மீக கலை நிகழ்;ச்சிகள், பரதநாட்டிய நிகழச்சிகள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 9-ஆம் திருநாளான 18-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.