திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகள் திருட்டு நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

நெல்லை: இப்படி திருடி திருடி ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிடணுமா என்று தெரியவில்லை. தினமும் பிரியாணியாம். ஆனால் ஆடுங்க எங்க இருந்து கிடைக்கிறது என்பதுதான் ஒரே குழப்பமா இருக்கு?

நெல்லை மாவட்டம் நாங்குனேரி கிராமப் பகுதிகளில் நிறைய வீடுகளில் ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். இந்த ஆடுகளை ஒரு கும்பல் குறி வைத்துள்ளது.

The Mysterious mob steals the Goat in Thirunelveli Surrounding

இவர்களுக்கு வேலையே பகலில் எந்த வீட்டில் எத்தனை ஆடுகள் உள்ளது என்பதை குறிவைப்பதும், ராத்திரி நேரத்தில் அந்த ஆடுகளை ஆட்டைய போடுவதும்தான்!

நள்ளிரவு நேரத்தில் கிடாய்களில் உள்ள ஆடுகளை திருடிக் கொண்டு ஒதுக்குப்புற வயல் காடுகள், பம்புசெட்டுகள் பகுதிக்கு தூக்கி சென்றுவிடுகிறார்கள். உடனடியாக ஆடு வெட்டப்பட்டு ஒரு பக்கம் பிரியாணி ரெடி ஆகிறது, மற்றொரு பக்கம், மது விருந்தில் உட்காருகிறார்கள். ஃபுல்போதை ஆனதும், ஆட்டம், பாட்டத்துடன், பிரியாணியும், கறிவிருந்தும் ஆரம்பமாகிறது.

The Mysterious mob steals the Goat in Thirunelveli Surrounding

இவர்கள் யார் என தெரியவில்லை. நிறைய வீடுகளில் ஆடுகளை நம்பிதான் பிழைப்பு ஓடுகிறது. ஒருசில வீட்டில் 3, 4 ஆடுகளை கூட களவாடிட்டு போயிடறாங்களாம். இது சம்பந்தமாக புகார்கள் ஏராளமாக போலீசுக்கு சென்றும், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பிரச்சாரம்.. பிரதமர் மோடியின் பதிலடி இதுதான்! கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பிரச்சாரம்.. பிரதமர் மோடியின் பதிலடி இதுதான்!

குறிப்பாக நாங்குநேரி பகுதி மக்கள் ஆடுகளை பறிகொடுத்து, பிழைப்பின்றி தவித்து வருகின்றனர். அந்த ஆடு திருடன கும்பல் யாராக இருக்கும் என்றுதான் இதுவரை மர்மமாகவே உள்ளது!

English summary
In Thirunelveli surroundings, the mysterious mob steals the sheeps
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X