திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லை கிணற்றில் 3 திருநங்கைகள்.. சாக்கு பையில் கட்டி கிணற்றுக்குள் வீசிய சம்பவம்!

Google Oneindia Tamil News

நெல்லை : நெல்லையில் முன்விரோதம் காரணமாக 2 திருநங்கைகள் உட்பட 3 பேரை கொலை செய்து உடல்களை சாக்குகளில் கட்டி கிணற்றிற்குள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே கிணற்றில் கிடந்த 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார் இக்கொலைகள் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் சுமார் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். இங்கு வசித்து வந்த பவானியை கடந்த சில நாள்களாக காணவில்லை. மேலும், அவர், மகாராஜா நகர் பகுதியில் உள்ள முருகன், அனுஷ்கா ஆகியோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால், அங்கு முருகனும், அனுஷ்காவும் இல்லை. மேலும், அந்த வீட்டில் ரத்தக்கறை இருந்தது.

பீகார் சட்டசபை தேர்தல்...பிரச்சாரத்துக்கு ஓகே.. ஆன்லைன் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் வெளியீடு!!பீகார் சட்டசபை தேர்தல்...பிரச்சாரத்துக்கு ஓகே.. ஆன்லைன் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் வெளியீடு!!

காணாமல் போன பவானி

காணாமல் போன பவானி

இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள், இது குறித்து சுத்தமல்லி போலீஸில் புகார் அளித்தனர். தங்களுக்கு சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவருடன்தான் கடைசியாக பவானி சென்றதாகவும் கூறியிருக்கிறார்கள். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரிஷிகேஷ் உள்பட 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

விசாரணையில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டதாகவும், மகாராஜ நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களின் உடலை போட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். உடனடியாக போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் கூறியது போல் உடல்கள் எதுவும் இல்லை.

விரைந்த போலீஸ்

விரைந்த போலீஸ்

இதையடுத்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பவானி உள்ளிட்ட 3 பேரின் உடல்களை சாக்குமூட்டையில் கட்டி பாளையங்கோட்டை கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள 2 கிணற்றில் போட்டதாக கூறியிருக்கிறார்கள். அதன்படி போலீஸார் அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, இரண்டு கிணற்றிலும் சாக்கு மூட்டைகள் மிதந்திருக்கின்றன.

கிணற்றில் மீட்பு

கிணற்றில் மீட்பு

இதையடுத்து கிணற்றில் மிதந்த உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரிஷிகேஷ் உள்ளிட்ட 3பேரிடமும் ஏன் கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இரண்டு திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. .

English summary
nellai district Police have recovered the bodies of 3 persons in a well near Palayankottai four lanes and have arrested 3 persons in connection with the murders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X