''அண்ணே எங்க வீட்டுல தண்ணியாவது குடிங்க''.. திக்குமுக்காடிய தினகரன்..!
Recommended Video
நெல்லை: நெற்கட்டும் சேவலுக்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது, அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் அன்பை வெளிப்படுத்திய விதம் அவரை திக்குமுக்காட செய்துவிட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் விழா கடந்த 1-ம் தேதி நெல்லை மாவட்டம் நெற்கட்டும்சேவலில் நடைபெற்றது.
பூலித்தேவன் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றிருந்தனர்.
250 கிராம் அணுகுண்டு போதும்.. இந்தியாவை 22 கூறுகளாக தகர்ப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர் பூச்சாண்டி!
திருச்சியில் திருமணம்
நேற்று முன் தினம் தலைமை நிலையச் செயலாளர் மனோகரன் இல்ல மணவிழாவை திருச்சியில் காலை நடத்தி வைத்த தினகரன், அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக பயணித்து மாலை நெற்கட்டும் சேவலுக்கு சென்றார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா விமரிசையாக செய்திருந்தார்.
மக்கள் அன்பு
பூலித்தேவன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு திரும்பிய டிடிவி தினகரன், மாலை நேரமாக இருந்ததால் திறந்த வேனில் நின்று கொண்டு தன்னை வேடிக்கை பார்க்க திரண்டவர்களிடம் கையசைத்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்ததால், உற்சாகமடைந்த தினகரன் டக்கென்று மைக் பிடித்து பேசத்தொடங்கினார்.
தண்ணியாவது குடிங்க
தினகரன் பேசிக்கொண்டிருக்கும் போதே ''அண்ணே எங்க வீட்டுல ஒரு செம்பு தண்ணீயவது குடிங்கண்ணே'' என ஒரு பெண் குரல் கொடுத்தார். உடனே சுற்றியிருந்த பெண்களும் கோரஸ் கொடுக்க, ''சரிம்மா தண்ணீர் கொடுங்க குடிச்சுட்டு போறேன்'' என வழக்கமான தனது டிரேட்மார் சிரிப்புடன் தண்ணீரை வாங்கி அருந்தினார் தினகரன்.
அன்பு இன்னும் இருக்கு
தினகரன் மீது அடிமட்ட தொண்டர்கள் அளவில் இன்னும் நிறைய அன்பும், எதிர்பார்ப்பும் இருக்கிறது என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக அமமுகவினர் கருதுகிறார்கள். தினகரன் மட்டும் சற்று இறங்கி வந்து அனைவரையும் அணுசரித்து செயல்பட்டால் மீண்டும் மீண்டு வரலாம் என்றும் அமமுகவினர் நம்புகிறார்கள்.