5000 லஞ்சம்.. கையும் களவுமாக பிடிபட்ட பெண் துணை தாசில்தார்.. கலெக்டர் அலுவலகலத்தில் பரபரப்பு
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பாளையங்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியபோது ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாளையாங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஜாதி சான்றுகள மற்றும் சான்றிதழ்கள் பெற லஞ்சம் கேட்பதாக வந்த புகாரையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சுப்பையா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வட்டாசியர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
வெளியாட்கள் உள்ளேயும் அலுவலர்கள் வெளியே செல்லாத வண்ணமும் அலுவலக வாசல் கதவை மூடி விசாரணை நடத்தினர். இறுதியில், துணை தாசில்தார் விஜி என்பல் மணல் காண்டிராக்டர் ஒருவரிடம் ரூ. 5000 லஞ்சம் வாங்கியதற்காக அவரை போலீஸார் கைது செய்தனர்.
Comments
English summary
A woman Deputy Tahsildar has been arrested in Nellai for accepting Rs 5000 bribe.