திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொத்தை தரப்போறியா இல்லையா.. தூங்கி கொண்டிருந்த கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி!

சொத்துக்காக கணவனை தீ வைத்து மனைவி கொளுத்தி விட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சொத்தை தரப்போறியா இல்லையா.. கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி!-வீடியோ

    நெல்லை: "சொத்தை என் பேருக்கு எழுதி வைக்க போறியா இல்லையா" என்று கணவன் பாக்யராஜை கேட்டு கேட்டு தவித்து போய்விட்டார் மனைவி. இதனால் தூங்கி கொண்டிருந்த பாக்யராஜ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார்!

    நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர், பாக்யராஜ். இவர் ஒரு விவசாயி. மனைவி மரியலீலா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    Woman killed husband near Nellai

    மகன்கள் இருவருமே வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். மகன்கள் வெளிநாடு போனபிறகுதான் மகள்களுக்கு பாக்யராஜால் கல்யாணம் செய்து வைக்க முடிந்தது. மேலும் இப்போது இருக்கும் சொத்துக்கள் அனைத்துமே மகன்கள் உழைத்து சம்பாதித்து அனுப்பியவைதான்.

    இந்நிலையில், தனக்கும் 60 வயது ஆவதால், சொத்துக்களை மகன்களின் பெயரிலேயே உயில் எழுதி வைத்துள்ளார் பாக்யராஜ். இதற்கு மனைவி மரியலீலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சொத்துக்கள் எல்லாவற்றையும் தன் பெயருக்கு எழுதி தரும்படி கேட்கவும், அதற்கு பாக்யராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

    ஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ

    அப்படியானால், 2 மகன்களை போலவே, 2 மகள்களுக்கும் சொத்துகளை பிரித்து தர வேண்டும் என்று மரியலீலா கேட்டுள்ளார். அதற்கும் பாக்யராஜ் மறுப்பு சொல்லி உள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை, தகராறு நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், மகன்களுக்கு எழுதி வைத்த நிலத்தை அளவீடு செய்யும் பணி நடக்கவும், மரியலீலா கொதித்து போய்விட்டார்.

    என்ன சொல்லியும் கணவர் கேட்காத ஆத்திரத்தில் திரும்பவும் சண்டை போட வீட்டுக்குள் நுழைந்தார் மரியலீலா. அப்போது பாக்யராஜ் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து அவர் மீது ஊற்றி விட்டு தீ வைத்து விட்டார்.

    உடம்பெல்லாம் குப்பென்று தீப்பற்றிய நிலையில் அலறி துடித்தார் பாக்யராஜ். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மரியலீலாவை வள்ளியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Wife killed her husband due to property issue and Valliyoor police arrested near Thirunelveli
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X