இலவச தையல் இயந்திரம் வாங்க விருப்பமா.. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இலவச தையல் இந்திரம் வாங்க விரும்பும் ஏழை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்ப படிவத்தை https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றத்திறனாளி மற்றும் நலிவுற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாயந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வருமான சான்று ரூ.72000க்குள் இருக்க வேண்டும் ( வட்டாட்சியரிடம் பெற வேண்டும்)
இருப்பிடச் சான்று (வட்டாச்சியரிடம் பெற வேண்டும் அல்லது ரேஷன் கார்டு)
தையல் பயிற்சி சான்று சான்று பதிவு ( பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது) (6மாத கால பயிற்சி).
வயது சான்று (20 வயது முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்பு சான்று
சாதிச்சான்று
கடவுச் சீட்டு (பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்) அளவு மனுதாரரின் கலர் புகைப்படம் -2
விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மறறும் மாற்றத்திறனாளி எனில் அதற்கான சான்று நகல்
கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்.. அசத்தும் திருநெல்வேலி போலீஸ்
ஆதார் அடையா அட்டை
பொதுமக்களின் நலன் கருதி தகதியான மகளிர் மேற்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 27.06.2020க்குள் அஞ்சல் மூலம் சமர்பிக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்படிவத்தை https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக சமர்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட சமூக நல அலுவலகம்
பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு
வ.உ.சி. மைதானம் எதிரில்
பாளையங்கோட்டை -2
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.