திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏம்மா.. புருஷன் சரியில்லைன்னா.. இப்படியா பண்ணுவீங்க.. இளம்தாய்க்கு போலீஸ் அட்வைஸ்!

சங்கரன்கோயில் அருகே 6 வயது மகளுடன் தற்கொலைக்கு தாய் முயன்றுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 6 வயது பெண் குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி-வீடியோ

    நெல்லை: சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 6 வயது பெண் குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி மேலத்தெருவை சேர்ந்த தம்பதி சங்கர் - அமுதா. சங்கருக்கு 40 வயது, அமுதாவுக்கு 35 வயதாகிறது.

    கல்யாணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. மகாலெட்சுமி, பிரியதர்ஷினி என்ற 12 மற்றும் 6 வயது பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்! ஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்!

    5 லட்சம் ரூபாய்

    5 லட்சம் ரூபாய்

    சங்கர் பெட்டிக்கடை வைத்திருக்கிறார். ஆனால் குடும்பத்தை சரிவர கவனிக்காமல், குடித்துவிட்டு, ஊதாரித்தனமாக நடந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. தினமும் வீட்டுக்கு வந்து அமுதாவிடம் சண்டை போடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதைதவிர 5 லட்சம் ரூபாய் வரை அவருக்கு கடனும் உள்ளதாம்.

    அடிஉதை

    அடிஉதை

    இது பற்றியெல்லாம் அமுதா ஏற்கனவே சின்னக் கோவிலான்குளம் மற்றும் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. தினம் அடிஉதையால் சித்ரவதை தாங்க முடியாத அமுதா.. நேற்று 6 வயசு மகள் பிரியதர்ஷினியை அழைத்து கொண்டு சங்கரன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    ஆஸ்பத்திரி

    ஆஸ்பத்திரி

    அங்கிருந்த வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் முன்பு மகள் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தீ வைக்க முயன்றார். இதை பார்த்து மற்ற போலீசார் பதறி போய்விட்டனர். உடனடியாக விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி இருவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். ஆஸ்பத்திரியில் இருந்த பாத்ரூமுக்கு அழைத்துசென்று மீண்டும் தண்ணீர் ஊற்றி அழைத்து வந்தனர்

    உறுதி தந்தனர்

    உறுதி தந்தனர்

    பின்னர் போலீசார் அமுதாவிடம், "முதல்ல குளிம்மா.. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். இப்படியா குழந்தையை வெச்சுக்கிட்டு தற்கொலை பண்ண போறது?" என்று அறிவுறுத்தியதுடன், உரிய விசாரணை நடத்துகிறோம் என்று சொல்லி உறுதி தந்தனர்.

    English summary
    Young Lady attempt suicide in Sankarankovil Gov Hospital due to Family issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X