இது திராவிட மண்... ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை... ரஜினிகாந்த் மீது கே.பி.முனுசாமி பாய்ச்சல்..!
திருவள்ளூர்: நடிகர் ரஜினிகாந்தால் தமிழகத்தில் எதையும் மாற்ற முடியாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு மட்டும் தான் ஆன்மிக அரசியல் தெரியுமா என்றும் இது திராவிட மண் என்பதால் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை எனவும் கூறியுள்ளார்.
ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என ஓ.பி.எஸ். பதில் அளித்துள்ள நிலையில் கே.பி.முனுசாமி அதற்கு நேர்மாறாக ரஜினி மீது பாய்ந்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம்... நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணை நிற்கும்... சீமான் அறிவிப்பு..!
நேர்மையான ஆட்சி
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தால் எதுவும் செய்ய இயலாது என மிகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. என்ன ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது என்றும் ஏன் அதிமுக நேர்மையான ஆட்சியை தரவில்லையா எனவும் ரஜினிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்ற முடியாது
கம்யூனிஸ்ட், பாமக, போன்ற கட்சிகள் எல்லாம் நேர்மையான ஆட்சியை விரும்பவில்லையா என்றும் ஏதோ தாம் ஒருவர் மட்டுமே நேர்மையான ஆட்சியை விரும்புவது போல் ரஜினிகாந்த் பேசி வருவதாகவும் சாடியுள்ளார். ரஜினி ஒரு சாதாரண ஆள் என்றும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் ஆண்ட இந்த திராவிட மண்ணில் அவரால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது எனக் கூறியுள்ளார்.
மாறுபட்ட கருத்து
ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் ஓ.பி.எஸ். ஒரு கருத்துக் கூறியிருக்கும் நிலையில் அதில் உடன்பாடில்லை என்பதை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார் கே.பி.முனுசாமி. இதன் மூலம் கட்சியில் ஓ.பி.எஸ்.சுக்கான செல்வாக்கு மீண்டு சரியத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெட்ட வெளிச்சம்
இதனிடையே ரஜினிகாந்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ந்து பேசிய ஒரே நாளில் அதிமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான கே.பி.முனுசாமி ரஜினியை விமர்சித்து வசைபாடியுள்ளார். இதன் மூலம் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.