போருக்கு கூட இப்படி போவாங்களா?- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்
திருவள்ளூர்: மதுபானங்கள் வாங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டத்துக்கு வாகனங்களில் சென்னை குடிமகன்கள் படையெடுத்ததால் போலீசார் விழிபிதுங்கிப் போயுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சென்னையில் இருந்து மதுபானங்களை வாங்க வருவோருக்கு தடை விதிக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு மதுபானங்களை வாங்க குடிமகன்கள் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் படையெடுத்து சென்றனர். சோழவரம் அருகே சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி, மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல் மின்நிலையம், கொண்டக்கரை .பொன்னேரி ஆகிய இடங்களில் போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தினர்.
20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்
இதனையடுத்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோ என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் இரன்டு நாட்களில் 330 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இடைவிடாமல் வந்த இருசக்கர வாகனங்களை மீண்டும் எச்சரித்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் போலீசார்.