நான் யாரையும் காதலிக்கவில்லை.. ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.. ஆசிரியர் பகவான் விளக்கம்!
Recommended Video
திருவள்ளூர்: தான் யாரையும் காதலிக்கவில்லை என ஆசிரியர் பகவான் தன் மீதான புகார் குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆசிரியர் பகவானை பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக்கூறி திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் ஆசிரியர் பகவானுக்கு ஆதரவு பெருகியது.
இதனால் அவரது பணியிட மாற்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பள்ளிக்கல்வித்துறை. இந்நிலையில் திருமண மோசடி புகாரில் சிக்கியுள்ளார் ஆசிரியர் பகவான்.
பேசி நல்ல முடிவை எடுங்க.. ஆசிரியர் பகவானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கிய போலீஸ்!
ஏமாற்றியதாக புகார்
வெள்ளியகரத்தை சேர்ந்த நாதமுனி என்பவரின் மகள் கவிதாவை ஆசிரியர் பகவான் காதலித்ததாகவும் திருமணம் செய்துகொள்வதாக ஆசிரியர் பகவான் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஆசிரியர் விளக்கம்
இதனால் நேற்று காலை முதல் ஆசிரியர் பகவானிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தன்மீதான புகார் குறித்து விளக்கமளித்துள்ளார் ஆசிரியர் பகவான்.
எனக்கு விருப்பமில்லை
அவர் கூறியிருப்பதாவது, என் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் முற்றிலும் ஆதாரமற்றது. உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேட்டனர். எனக்கு விருப்பமில்லை எனக் கூறி மறுத்துவிட்டேன்.
பெயருக்கு களங்கம்
தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கும் தயார்
புகாரின் மீதான விசாரணைக்கு தயாராக உள்ளேன். மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஆசிரியர் பகவான் தெரிவித்துள்ளார்.