திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா!

அண்ணன் முறை வரும் இளைஞரிடம் பெண்ணுக்கு உறவு இருந்துள்ளது

Google Oneindia Tamil News

திருத்தணி: உறவு முறை அண்ணனிடம் தகாத உறவு வைத்து கொண்டார் பெற்ற மகள்.. இதனால் அவமானம் அடைந்து, சொல்லி சொல்லி பார்த்து நொந்து போன பெற்றோர், கடைசியில் தூக்கு போட்டு கொண்டு தொங்கியே விட்டனர்.. இந்த சம்பவம் திருத்தணியில் நடந்துள்ளது.

திருத்தணி அருகே கோரக்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.. இவரது மனைவி பாக்கியம்.. இவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 பெண்கள்.

 couple committed suicide near tiruttani

3 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் கடைசி மகள் மட்டும் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்துவிட்டார்.. அதனால் அம்மா வீட்டிற்கே வந்துவிட்டார்.

இந்நிலையில், இவர்களின் வீட்டில் விடிகாலை நேரம் அலறல் சத்தம் கேட்டது... அதனால் பதறிபோன அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஏழுமலை வீட்டுக்கு சென்றனர்.. அங்கு ஏழுமலையும் பாக்கியமும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அலறினர்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் சொன்னார்கள்.

விரைந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், சடலங்களை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. பின்னர் விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான் இவர்கரளின் தற்கொலைக்கு காரணம் அவர்களது மூன்றாவது மகள் என்று தெரியவந்தது.

 வளர்மதி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா.. அதிரடியாக நுழைந்த போலீஸ்.. ஒரே ஓட்டம்! வளர்மதி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா.. அதிரடியாக நுழைந்த போலீஸ்.. ஒரே ஓட்டம்!

கணவரை பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்த மகள், சொந்தக்காரர் ஒருவரை காதலித்துள்ளார்.. அவர் இவருக்கு அண்ணன் முறையாம்.. இவர்களின் கள்ளக்காதல் வீட்டுக்கும் தெரிந்துவிட்டது.. அதனால் பதறிபோன பெற்றோர், மகளை கண்டித்து இருக்கிறார்கள்.

அந்த இளைஞர் டீச்சர் டிரெயினிங் படித்திருக்கிறாராம்.. தங்கை முறை என்று அவருக்கும் தெரிந்துதான் கள்ளக்காதலை வளர்த்துள்ளார்.. 2 பேரையும் கண்டித்து பார்த்தார் ஏழுமலை.. ஒருகட்டத்தில் அண்ணனுடனேயே வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார் மகள்.

அதனால் மனமுடைந்த ஏழுமலையும் பாக்கியமும் இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தனர் .. பின்னர் விடிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

English summary
couple committed suicide near tiruttani due to daughters illegal relationship
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X