முள் செடியில் நாசம் செய்து வீசப்பட்ட 4 வயது சிறுமி.. திருவள்ளூரில் அதிர்ச்சி!
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்
திருவள்ளூர்: காணாமல் போன 4 வயசு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்ட கொடூரம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் 'ஹாலோ பிளாக்' என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதில் ஒருவர்தான் அமீத் என்பவர். இவரது பூர்வீகம் ஒடிசா என்று கூறப்படுகிறது. வேலைநிமித்தமாக இங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார்.
கோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்!
4 வயது குழந்தை
இவரது 4 வயசு பெண் குழந்தை ஈசானி மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்தில் குழந்தை மாயமானது. இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் குழந்தையை தேடி அலைந்தனர். கடைசியில் போலீசிலும் புகார் அளித்தனர்.
சூளை
இந்நிலையில், காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி இறந்து நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைக்கு உடலெங்கும் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக போலீசுக்கு சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மதுபோதை
இது சம்பந்தமான விசாரணை துவங்கி உள்ளது. அதில், சிறுமியை அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மிராசு வயது 25, சந்திரபானு வயசு 60, ஆகிய 2 தொழிலாளர்கள் வெளியே அழைத்து சென்று உள்ளனர். அப்போது அவர்கள் இருவருமே மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இருவரும் அமீத்தின் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை?
உடலெங்கும் காயங்கள் இருப்பதால், குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர்களை விசாரித்து வருகிறார்கள். விசாரணை நடத்தப்பட்டு வந்தாலும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகுதான் முழு விவரமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாநில தம்பதியின் 4 வயசு குழந்தை நாசமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி நிறைந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.