சோழவரம் அருகே வாக்கு எண்ணும் மையம் முகவர்கள் மீது போலீஸ் தடியடி
Recommended Video
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சோழவரத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே முகவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமாகியுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு முகவர்கள் வந்தார்கள்.
அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தாமதமாகின. இதனால் முகவர்கல் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீஸாருடன் முகவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை- உ.பி. போலீஸ் புகாருக்கு பாப்புலர் பிரண்ட் மறுப்பு
அப்போது முகவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.