காஸ் டியூப்பை வாயில் சொருகி கொண்டு.. பிளாஸ்டிக் பையில் முகத்தை மூடி.. என்ன ஒரு கொடுமையான முடிவு!
கியாஸ் டியூப்பை வாயில் சொருகி கொண்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
திருவள்ளூர்: ரொம்ப நாளா உடம்பு சரியில்லை.. எவ்வளவோ வைத்தியம் பண்ணியும் குணமாகவில்லை.. மனமுடைந்த ரெயில்வே ஊழியர் சமையல் கியாஸ் சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈபி காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு ரெயில்வே ஊழியர். இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கார்த்திக்குக்கு உடம்பு சரியில்லை.. அதனால் ஏகப்பட்ட ஆஸ்பத்திரிக்கு போய் சிகிச்சையும் எடுத்து கொண்டார்.. ஆனால் உடல்நலம் தேறவில்லை.. நோயும் குணமாகவில்லை.. இதனால் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டாராம்.
சூப்பரா படிப்பார்.. நல்லா பியானா வாசிப்பார்.. திடீர் மரணம்.. குளத்தில் மிதந்த மாணவி.. ஷாக்!
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை பூட்டிக் கொண்டார்.. முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டார்.. அதில் கியாஸ் சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகி கொண்டு சுவாசித்தார்.... மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கவே இவ்வாறு கார்த்திக் செய்தார்.
அதன்படியே அந்த சுவாசிக்கவும், கார்த்திக் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார்த்திக் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!