ராத்திரி நேரம்.. வயற்காட்டில்.. விதவை பெண் என்றும் பாராமல்.. திருவண்ணாமலை அருகே குரூரம்!
விதவையை பலாத்காரம் செய்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்
திருவண்ணாமலை: விதவை பெண் என்றும் பாராமல்.. நைட் நேரத்தில்.. வயக்காட்டில் லட்சுமியை பலாத்காரமும் செய்து கொலையும் செய்துள்ளார் ஒரு குரூரர்!
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்துள்ளது வேலந்தாங்கல் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் லட்சுமி.. 49 வயதாகிறது.. கணவனை இழந்தவர்.. தன் மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி, ரகுநாதசமுத்திரம் அருகே உள்ள தனது வயலில் காட்டுப்பன்றிகள் தொல்லையை தடுக்க இரவு காவல் பணிக்கு சென்றுள்ளார்.. ஆனால் பொழுதுவிடிந்தும் லட்சுமி வீட்டுக்கு வரவே இல்லை.. அதனால், உறவினர்கள் பதறி போய் அக்கம் பக்கம் தேட துவங்கினர்.
அப்போதுதான், அங்குள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்தார் லட்சுமி.. இதை பார்த்து அலறிய அவர்கள், உடனடியாக பெரணமல்லூர் போலீசில் புகார் தரவும், அவர்கள் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..
பிறகுதான், லட்சுமியை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடந்த 11ம் தேதி ...
வேலந்தாங்கல் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் மீது சந்தேகம் வலுக்கவும், அவரைபிடித்து விசாரித்தனர்.. அவருக்கு 36 வயதாகிறது.. ஆனால் போதிய ஆதாரம்எதுவுமே கிடைக்காமல் அவரை அனுப்பி வைத்துவிட்டனர்.
இந்நிலையில் 2 நாளைக்கு முன்பு நடராஜன் ரெட்டிகுப்பம் விஏஓவிடம் நேரில் வந்து, தான்தான் லட்சுமியை கொன்றதாக வாக்குமூலம் தந்து, சரணடைந்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, "சம்பவத்தன்று குடிபோதையில் இருந்தேன்.. நைட் நேரம் இருட்டாக இருந்தது.. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெளிச்சமாக இருந்தது.. அங்கு சென்று பார்த்தால்,லட்சுமி மட்டும் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அதனால்தான் உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தேன்.. அவர் மறுக்கவும், நான் வலுக்கட்டாயமாக அவரை பலாத்காரம் செய்தேன்.. பிறகு கழுத்தையும் நெரித்து கொன்றுவிட்டு, அங்கிருந்த கிணற்றில் பிணத்தை தூக்கி வீசிவிட்டு வந்தேன்" என்றார்.. இதையடுத்து கொலை நடந்த 10 மாதங்களுக்கு பிறகு தானாக வந்து சரணடைந்த நடராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.