திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

16 வயது சிறுமியுடன் 3 வருட பழக்கம்.. திடீரென கத்தியால் குத்திய இளைஞர்., சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி : 16 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான இளைஞர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் வயது 30,சென்னை வேளச்சேரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

A 16-year-old girl was stabbed by a youth, He committed suicide by hanging

இவருக்கும் சின்ன சேலத்தைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சிறுமியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது சிறுமிக்கும் சதீஷுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சிறுமியை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.சிறுமிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, சிறுமி உயிர் பிழைத்துக் கொண்டார். சிறுமி தெரிவித்த தகவலின் பேரில் சதீஷ் போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

A 16-year-old girl was stabbed by a youth, He committed suicide by hanging

இந்த நிலையில் சேலம் உடையாப்பட்டி பைபாஸ் அருகிலுள்ள பெருமாள் கோவில்மேடு பகுதியில் இருக்கும் மரங்கள் அடர்ந்த புதரில் சதீஷ் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை மீட்டனர், சதீஷின் சட்டைப்பையில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார்.

A 16-year-old girl was stabbed by a youth, He committed suicide by hanging

இஸ்ரோ வேலை.. 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலை.. 2 லட்சம் வரை சம்பளம் இஸ்ரோ வேலை.. 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலை.. 2 லட்சம் வரை சம்பளம்

அதில் சிறுமி தன்னை டார்ச்சர் செய்ததாகவும் இதனால் மனமுடைந்து சிறுமியை கத்தியால் விட்டு தப்பி ஓடி வந்ததாகவும் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

A 16-year-old girl was stabbed by a youth, He committed suicide by hanging

சதீஷின் செல்போன், இருசக்கர வாகனம், சிறிய ஸ்டூல், கயிறு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே சதீஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா உடனே சம்பவ இடம் வந்து விசாரணை செய்தார்.

English summary
A 16-year-old girl was stabbed by a youth, He committed suicide by hanging. in salem at midnight. police inquarys on the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X