பிரியாணிக்காக.. மகாலட்சுமி மகன் காது குத்து விழாவில் மோதல்.. மாடு வெட்டும் கத்தியால் சரமாரி குத்து
திருவண்ணாமலை: ஒரு பார்சல் பிரியாணி கேட்டார் ஏழுமலை.. அதை தந்திருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.. இந்த விவகாரம் பூதாகரமாகி கடைசியில் காதுகுத்து விழா, கத்திகுத்து வரை சென்றுவிட்டது!
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்துள்ள கிராமம் செல்லங்குப்பம்.. இங்கு புது காலனியில் வசித்து வரும் தம்பதி கோவிந்தன் - மகாலட்சுமி.. மகாலட்சுமிக்கு 32 வயதாகிறது.. இவருடைய குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
காதுகுத்து என்பதால் கிடா வைத்து பிரியாணி விருந்து வைத்தனர்... அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் விருந்துக்கு வந்தார்.. தனக்கு பிரியாணி பார்சல் வேண்டும் என்று மகாலட்சுமியின் சொந்தக்காரர் சுகுமாரிடம் தகராறு செய்தார்... ஆனால் பிரியாணி தரவில்லை... இதனால் சுகுமார் வாக்குவாதம் செய்யவும், அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.
பங்களா வீட்டில்.. அக்கா - தங்கை சேர்ந்து செய்த காரியம்.. மிரண்டு போன சென்னை போலீஸ்!!
இந்த நிலையில் விழாவில் பிரியாணி கேட்ட ஏழுமலையிடம் நியாயம் கேட்க மகாலட்சுமியின் உறவினர் பாஸ்கர் உள்ளிட்ட சிலர் சென்றனர்... அப்போது திரும்பவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது... இதனால் அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவர்களை சமாதானம் செய்ய முன்வந்தார்.
அப்போது ஏழுமலை பாஸ்கரிடம் "நீ யார் நடுவில் பஞ்சாயத்து பண்ண?" என்று கேட்டுள்ளார்.. இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.. ஒரு கட்டத்தில், பாஸ்கரை ஏழுமலை கீழே தள்ளி அடித்து உதைத்தார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல், மாடு வெட்டும் கத்தியால் வயிறு, நெற்றியில் சரமாரி குத்தினார்... இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பாஸ்கரை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வேட்டவலம் போலீசில் மகாலட்சுமி புகார் தரவும், அதன்படி விசாரணையும் நடந்து வருகிறது.. ஒரு பிரியாணி பார்சல் கேட்க போய்.. கடைசியில் கத்திக்குத்து வரை நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.