திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்
திருவண்ணாமலை: திமுகவின் முப்பெரும் விழாவில் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் இணைந்து முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவண்ணாமலையில் பிரமாண்டமாக மாநாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் முரசொலி அறக்கட்டளை மூலம் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நிதி உதவி அளிக்கப்பட்டது. சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நற்சான்று, பண முடிப்பு பதக்கம் வழங்கப்பட்டது.
கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 4 மண்டலத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி செயலாளர் ஒருவருக்கும், சிறப்பு சாதனை புரிந்த 3 பேருக்கும் விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது, பணமுடிப்பு வழங்கப்பட்டன. முன்னதாக முப்பெரும் விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முடியவில்லை என்றால் எழுதிக்கொடுங்க...! ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி
மாலையில் தந்தை பெரியார் விருது வேணுகோபாலுக்கும்; அண்ணா விருது நந்தகோபாலுக்கும் கலைஞர் விருது ஏகே ஜெகதீசனுக்கும் பாவேந்தர் விருது சித்திரமுகி சத்தியவாணி முத்துவுக்கும் பேராசிரியர் விருது இறைவனுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.