"திமுக, அண்ணா திமுகவுக்கு ஓட்டுப் போடாதீங்க"... அடடா.. பழக்க தோஷத்துல தப்பாக பேசிய ராமதாஸ்!
ஆரணி பிரச்சாரத்தில் வாய் தவறி பேசி டாக்டர் ராமதாஸ் ஓட்டு கேட்டார்.
ஆரணி: பழைய நினைப்பா என்னன்னு தெரியல.. பழக்க தோஷத்துல ஓட்டு கேட்கும்போது ஏடாகூடமாக கேட்டுவிட்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
கடந்த சில தினங்களாகவே டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
வழக்கம்போலவே, இந்த முறையும் ராமதாஸ் பேச்சை கேட்ட கூட்டம் முண்டியத்து வருகிறது. அதற்கேற்றார்போல ராமதாசும் பிரச்சாரங்களில் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில், ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலைக்கு ஆதரவாக ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நல்லாதான் பேசிக் கொண்டும், வாக்கு கேட்டுக் கொண்டும் இருந்தார்... திடீரென "திமுக, அண்ணா திமுகவுக்கு... வாக்களிக்காதீர்கள்" என்றார்.
திரண்டிருந்த கூட்டம் ஒரு செகண்டு மிரண்டே போய்விட்டது. திமுக, காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்பதற்கு பதிலாக தான் இப்படி வாய் தவறி ராமதாஸ் பேசிவிட்டார் என்பது புரிந்தது. ஆனால் உடனே சுதாரித்து கொண்ட டாக்டர், தனது தவறை திருத்திக்கொண்டு, ''திமுக, காங்கிரஸுக்கு மறந்தும் வாக்களிக்காதீர்கள்'' என்றார்.
திமுக கதை முடிய போகிறது.. ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடும் நேரம் வந்து விட்டது.. ராமதாஸ் அட்டாக்
உண்மைதான்.. நிச்சயம் மறக்க மாட்டார்கள்தான்.. ''கார் உள்ளளவும்... கடல் நீர் உள்ளளவும்... பார் உள்ளளவும்... பைந்தமிழ் உள்ளளவும்... என்று எப்பவோ, எதுக்கோ டாக்டர் சொன்னது கண்டிப்பாக ஞாபகத்தில் இருக்கும்!