தி.மலை அருகே துணிகரம்... டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு
செங்கம்: திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 3 முகமூடி கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.
செங்கம் பெருமுட்டம் பகுதியில் நேற்றிரவு டாஸ்மாக் கடை ஊழியர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
காலில் குண்டடிபட்ட நிலையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் சண்முகம் தப்பியோடியதால் ரூ. 3 லட்சம் பணம் தப்பியது.
இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 கொள்ளையர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மேற்பார்வையாளர் சண்முகம்(40), விற்பனையாளர் லட்சுமன் (42) ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
Three masked robbers have been fired on Tasmac employees near Thiruvannamalai.
Story first published: Saturday, January 26, 2019, 11:22 [IST]