திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூம் போட்டு நாசம் செஞ்சாச்சு.. அயய்யோ போலீஸ் பிடிச்சிருமே.. அலறி அடித்து கல்யாணம்.. பிறகு எஸ்கேப்!

ஏமாற்றி விட்டு சென்ற கணவன் மீது இளம் மனைவி புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    காதலியை நாசம் செய்துவிட்டு..கல்யாணமும் செய்துவிட்டு.. தப்பி ஓடிவிட்ட இளைஞர்-வீடியோ

    திருவண்ணாமலை: காதலியை ரூம் போட்டு நாசம் செய்துவிட்டு.. போலீசுக்கு பயந்து அந்த பெண்ணையே கல்யாணமும் செய்துவிட்டு.. தலைமறைவாகி விட்டார் இளைஞர் ஒருவர்!

    திருவண்ணாமலை போளூரை சேர்ந்த இளம்பெண் செலின். சென்னை அடையாறில் ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போதுதான், அங்கு வேலை பார்த்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அருண் என்ற இளைஞர் அறிமுகமானார். 6 வருட நட்பு.. காதலாக மாறியது.. இந்நிலையில் பெங்களூர் கிளைக்கு செலினுக்கு டிரான்ஸ்பர் ஆனது. இதையடுத்து அருண் கல்யாண பேச்சை வம்படியாக ஆரம்பித்தார்.

    புகார்

    புகார்

    போன மார்ச் மாதம் பெங்களூர் சென்ற அருண், ஹோட்டலில் ரூம் போட்டு, அங்கு செலினையும் வரவழைத்துள்ளார். அவருடன் கட்டாயப்படுத்தி ஜாலியாகவும் இருந்திருக்கிறார். அதற்குபிறகு கல்யாணத்தை பற்றி பேச்சையே எடுக்க காணோம். தன்னை விட்டு அருண் மெல்ல மெல்ல விலகுவதை அறிந்து, பொறுமை இழந்த செலின், பெங்களூர் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதை அருண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    முறைப்படி பதிவு

    முறைப்படி பதிவு

    அதனால் போலீசுக்கு பயந்து கொண்டு, போன ஆகஸ்ட் மாதம் தன்னுடைய சொந்தக்காரர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்டார். அதை முறைப்படி கலசப்பாக்கம் ரிஜிஸ்தர் ஆபீசில் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, செலின் வழக்கம்போல் பெங்களூரில் வேலை பார்க்க, அங்கு தனக்கு எந்த வேலையும் இல்லாமல் சும்மா சுற்றி திரிந்துள்ளார் அருண்.

    தலைமறைவு

    தலைமறைவு

    ஒருநாள், செலினுடன் ஜாலியாக இருந்த வீடியோ ஒன்றை தன்னுடைய நண்பனுக்கு அருண் அனுப்பி உள்ளார். இதை அறிந்து செலின் ஆத்திரப்பட்டார். இருவருக்குள்ளும் சண்டை வெடித்தது. இதையே சாக்காக வைத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டார் அருண். ஆனால் கொஞ்ச நாளில் அங்கியும் அருணை காணோம். எங்கிருக்கிறார் என்று அருண் குடும்பத்தாரும் சரியாக பதில் சொல்லவில்லை.

    தேடுதல் வேட்டை

    தேடுதல் வேட்டை

    இதனால் அதிர்ச்சியடைந்த செலின், திரும்பவும் அருண் மீது ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார். இப்போது அருண் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. போலீசுக்கு பயந்துபோய் தாலி கட்டிவிட்டு, மாயமான அருணை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    Young woman complaint against her husband near Pudukottai and police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X