திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே வீடு.. தனித் தனி ரூமில்.. கணவனும் மனைவியும்.. கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகலை.. கொடுமை!

புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: ஒரே வீடு.. தனித்தனி ரூமில்.. ஆளுக்கு ஒரு தூக்கு கயிறில் கணவன் மனைவி இருவருமே தொங்கிவிட்டனர்.. இந்த தம்பதிக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம் கூட ஆகவில்லை என்பதே சோகம்!!

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகில் மோத்தக்கல் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் வேடியப்பன்... இவருடைய மகன் ஜெயக்குமார்.. 24 வயதாகிறது.. டிப்ளமோ படித்திருக்கிறார்.

lockdown crimes: young couple commits suicide near thiruvannamalai

இவருக்கு விஜயா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.. விஜயாவுக்கு 23 வயது.. டீச்சர் டிரெயினிங் படித்துள்ளார்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்.. இந்த நட்பு காதலானது.. அதனால் அடிக்கடி ஜெயக்குமார், விஜயாவை சந்திக்க கல்லூர் கிராமத்துக்கு சென்று வந்தார்.

ஜெயக்குமார் அடிக்கடி கிராமத்துக்கு வந்து போனதும் மகளை பார்த்து விட்டு போவதும் விஜயாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பும் எழுந்தது. அதேபோல, ஜெயக்குமாரின் வீட்டிலும் விஜயாவை ஏற்க விருப்பம் இல்லை.

இதனால் காதலர்கள் இருவரும் ஒன்றரை மாசத்துக்கு முன்பு தங்களது வீட்டை விட்டு வெளியேறினர்.. ஒரு கோயிலில் வைத்து விஜயாவுக்கு தாலி கட்டினார் ஜெயக்குமார்.. இதன்பிறகு கோட்டக்கல் என்ற கிராமத்திற்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

 பெற்றோரை வெட்டிய கும்பல்.. இறந்த அப்பா பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து.. போனில் கதறிய குழந்தை பெற்றோரை வெட்டிய கும்பல்.. இறந்த அப்பா பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து.. போனில் கதறிய குழந்தை

ஆனாலும் விஜயா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்... கடுமையாக திட்டி உள்ளனர்.. நாள் ஆக ஆக வசவுகள் அதிகமானதால், தம்பதி இருவருமே மனம் உடைந்தனர்.. நிம்மதியாக வாழ விடாததால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, தனித்தனி ரூமில் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்யாணம் ஆகி ஒன்றரை மாசமே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.. புதுமண தம்பதியின் இந்த அதிர்ச்சி முடிவு அந்த பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் லாக்டவுன் வன்முறைகள் பெருகி வருவது போலவே துர்சம்பவங்களும் பெருகி வருவது தமிழக மக்களுக்கு கவலையை கூட்டி வருகிறது.

English summary
lockdown crimes: young couple commits suicide near thiruvannamalai due to family issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X